Thursday, May 3, 2007

புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு

புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு ராஜபக்ஷ் பரபரப்பு பேட்டி கீழே

கிரிக்கட்டை காணச் சென்ற ராஜபக்ஷ் நேற்று முந்தினம் வெஸ்ட இன்டீஸ் பகுதியிலிருந்து கட்டுனாயக்காவிமானநிலையம் மூலம் நாடு திரும்பினார். அவரை இடைமறித்த தமிழ்பித்தனின் வலையோசைக்கான இலங்கை செய்தியாளர்.

தமிழ்பித்தன் செய்தியாளர்:- வணக்கம் ஐயா!

ராஜபக்ஷ்:- வணக்கம் (சோகமும் பயமும் அவர் கண்ணில் தெரிகிறது)

தமிழ்பித்தன் செய்தியாளர்:-புலிகள் இப்போது ஒரு அரசுக்கான வலிமையுள்ள வான்படையை பெற்று விட்டார்களாம் பலதடவை அதை நிருபித்தும் விட்டார்கள். இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

ராஜபக்ஷ்:- ஆமாம் இவர்கள் பல தாக்குதலை செய்திருக்கிறார்கள் அதை முதலில் கண்டிக்கிறேன் மேலும் இவர்களது இந்த வான்பலம் தெற்காசியாவுக்கு மட்டும் அல்ல முழு உலகத்துக்குமே அச்சுறுத்தல்தான் முக்கியமாக அமெரிக்காவுக்கு.

எங்களுக்கு தற்போது கிடைத்த புலனாய்வுத் தகவலின் படி இவர்களுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருப்பது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பாவிக்கும் விமானத்தொழில்நுட்பம் வேற்றுகிரகத்தார் வழங்கியவையே இவர்கள் விமானங்களுக்கும் பறக்கும் தட்டுக்கும் உள்ள ஒற்றுமையே அதை வெளிப்படையாக கூறும்

முதலாவது பறக்கும் தட்டைப்போலவே இவர்கள் விமானமும் ராடர்கருவியினுள் சிக்கவதில்லை

இரண்டாவது இரவினுள் மட்டுமே தாக்குதல் செய்வது

மூன்றாவது சத்தம் இன்றி பறப்பை மேற்கொள்வது

இவர்களால் பகலில் தாக்குதல் செய்ய முடியாது. இதை உறிதிப்படுத்தியே எமது அமைச்சர் ஒருவர் சவால் விடுத்திருந்தார். அத்துடன் இவர்களிடம் இன்னும் பல பயங்கர ஆயுதங்கள் இருக்கலாம். என அஞ்சுகிறேன்

முன்னொரு தடவை(2001 ம் ஆண்டு) பொலநறுவைக் காட்டுப்பகுதியில் வேற்றுக்கிரகத்தார் வந்து இறங்கினார்களே அது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அது புலிகளை காணச்சென்ற அவர்களது பறக்கம் தட்டே பாதை மாறி அருகிலுள்ள பொலநறுவையினுள் தரைவிறங்கியது.

இவர்களது இந்த வெளிக்கிரக வாசிகளுடனான தொடர்பால் முழுஉலகத்துக்குமே ஆபத்து இதை ஓர் உள்நாட்டுப் போர் எனக்கருத முடியாது. இது பூமிக்கும் வேற்றுக்கிரகத்தவருக்கும் இடையான யுத்தம் இதை முறையடிக்க முழுஉலகமும் திரண்டு வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்


தமிழ்பித்தன் செய்தியாளர்:-இவ்வளவு பயப்பீதியினுள்ளும் இந்த கட்டுநாயக்காவினுள் இருந்து இவ்வளவு நேரம் பேட்டி வழங்கிய உங்களுக்கு எனது நன்றிகள்

4 கருத்துக்கள்:

Anonymous said...

நல்ல நகைச்சுவையான பதிவு நண்பரே... ரஜபக்ஸ இவ்வாறு புலிகளுக்கும் வேற்றுக் கிரகத்தினருக்கும் தொடர்பு என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....

தமிழ்பித்தன் said...

ஆமாம் நண்பரே முன்னைய அரசுதலைவர் புலிகளுக்கும் பில்லாடன் பொன்றவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறியமை நினைவு கூறத்தக்கது

Anonymous said...

தமிழ்"பித்தன்"

பொருத்தமான பெயர் :-))

Anonymous said...

ஆமாம் நான் ப் பாவிப்பதில்லை என்பதை கண்டு பிடித்து விட்டீர்கள் போல
தமிழ்பித்தன்
(எமது கல்லூரியில் எதிலும் உள்நுழைவோமாயிருந்தால் அதை தடுக்கிறது அதனால் அனாமியாக)